ஜப்பானில் நுழைவுத் தேர்வின் போது நிகழ்ந்த கத்திக்குத்து-மாணவர்கள் காயம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நுழைவுத் தேர்வின் போது நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஏராளமான மாணவர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2022-01-16 11:55 GMT
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நுழைவுத் தேர்வின் போது நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஏராளமான மாணவர்கள் காயம் அடைந்தனர்.  பல்வேறு மேல் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்காக டோக்கியோ வந்திருந்த நிலையில், அவர்களை 17 வயது சிறுவன் சரமாரியாகக் கத்தியால் தாக்கத் துவங்கியுள்ளார். இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனைக் கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்