அரசு பேருந்து மோதி இரு காவலர்கள் படுகாயம் : கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில், 2 காவலர்கள் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-01-18 12:30 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில், 2 காவலர்கள் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும், செல்ல தங்கம் மற்றும், சிறப்புப்படை காவலர் அருள்முருகன், இருவரும் இரு சக்கர வாகனத்தில், செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். தைலாவரம் அருகே வந்த போது, கல்பாக்கம் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், படுகாயமடைந்த இரு காவலர்களும் சிகிச்சைகாக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்