சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து..15 பேர் காயம்

Update: 2024-05-08 06:37 GMT

பழனி- கொடைக்கானல் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். சிதம்பரம், கடலூரில் இருந்து சுற்றுலா வந்த 20-க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு பழனி வழியாக வந்து கொண்டிருந்தனர். பழனியில் இருந்து ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே வளைவில் திரும்பும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த 15 பேர், ஆம்புலன்ஸ் வாகனத்தில் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்