சென்னையில் மாணவர்கள் செய்த அட்டகாசம்... தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-05-08 06:43 GMT

சென்னையில் மாநகர பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து மாணவர்கள் கூச்சலிட்டபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விவேகானந்தர் இல்லத்தில் இருந்து திரு.வி.க. நகர் நோக்கிச் சென்ற அந்த பேருந்தில், கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தை பேருந்து நெருங்கியபோது, போலீசார் தங்களை பிடித்துவிடக் கூடும் என்று நினைத்த மாணவர்கள், பேருந்தை நிறுத்த வைத்து, கீழே குதித்து தப்பிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்