லாரி மீது கார் மோதி விபத்து.. சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழப்பு

Update: 2024-05-08 06:36 GMT

அரியலூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றிய லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அரியலூரில் இருந்து சென்றவர்களின் கார், லாரியின் பின்னால் மோதியது. இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் ஆண்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள், தஞ்சையை மேலவீதியை சேர்ந்த ஈஸ்வரன், புவனேஷ் கிருஷ்ண சாமி, செல்வா, கரந்தையை சேர்ந்த சண்முகம் நான்கு பேரும் உயிரிழந்தனர்.

அரியலூரில் நடைபெற்ற ஒரு ஹோம நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது விபத்து விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்துள்ள நான்கு பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்விற்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்