ஒசூர் அருகே வியாபாரி வீட்டில் ரூ. 23 லட்சம் கொள்ளை

ஒசூர் அருகே அஞ்செட்டியில் ரமேஷ் என்ற வியாபாரி, வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 23 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Update: 2018-09-22 04:19 GMT
ஒசூர் அருகே அஞ்செட்டியில் ரமேஷ் என்ற வியாபாரி, வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 23 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தனது சகோதரர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் ரமேஷ் ஒசூர் சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து பீரோவிலிருந்த 23 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டின்   பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிரிச்சியடைந்த ரமேஷ், போலீஸில் புகார் அளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்