சென்னையில் நேற்று நடந்த அதிர்ச்சி சம்பவம் - இன்று சிசிடிவியில் அம்பலம்

Update: 2024-04-30 09:24 GMT

சென்னை மாதவரத்தில், மதுபோதையில் வாகனம் மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தில், 6 பேரை போலீசார் கைது செய்தனர். மாத்தூர் எம்.எம்.டிஏ. பகுதியில், மதுபோதையில் சுற்றித் திரிந்த இளைஞர்கள், அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட ஆட்டோவின் கண்ணாடிகளை உடைத்தும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியும் அராஜகம் செய்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி காட்சி உதவியுடன் விசாரணை செய்த போலீசார், சிவகுமார், அஜித்குமார், ஸ்டீபன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்