இரண்டு உயிர் மடிந்தும் - கிடைக்காத வெற்றி - நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் - திருப்பூரில் பரபரப்பு

Update: 2024-04-30 09:45 GMT

இரண்டு உயிர் மடிந்தும் கிடைக்காத வெற்றி

நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் திருப்பூரில் பரபரப்பு

தெக்கலூர் சூரிபாளையத்தைச் சேர்ந்த செல்வியை கடந்த 2023 மார்ச் 2ம் தேதி பேருந்து திருமுருகன் பூண்டி அம்மாபாளையத்தில் தெக்கலூர் செல்லாது எனக் கூறி இறக்கி விட்ட போது அவர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அனைத்து பேருந்துகளும் தெக்கலூர் வழித்தடத்தில் வந்து நின்று செல்ல வேண்டும் என்றும் மீறினால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், தெக்கலூர் வராமல் கல்லூரி மாணவர்களை இடையிலேயே இறக்கி விட்ட இரு தனியார் பேருந்துகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டி மக்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியினர் மீண்டும் போராட்டத்திற்கு அமர்ந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது... 2வது ஆர்ப்பாட்ட நாளான இன்றும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் அங்கு நிற்காமல் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.          

Tags:    

மேலும் செய்திகள்