"வாக்குகளை ஏன் வீணடிக்க வேண்டும்?" - பிரசாரத்தில் PM மோடி கேட்ட கேள்வி

Update: 2024-04-30 09:30 GMT

மகாராஷ்டிரா மாநிலம் மாதா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

வலிமையான அரசு தான், எதிர்கால தேவைகளை மனதில் கொண்டு, நிகழ்காலத்தையும் கவனித்துக் கொள்ள முடியும் என தெரிவித்தார். ரயில்வே, சாலைகள் மற்றும் விமான போக்குவரத்து களில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகவும், உட்கட்டமைப்பு திட்டங்களின் மீதான தங்களின் ஓராண்டு பட்ஜெட், காங்கிரஸ் கட்சியின் பத்தாண்டு கால பட்ஜெட்டிற்கு இணையானது எனக் குறிப்பிட்டார். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பெண்கள் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, மக்களவையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட போட்டியிடாத கட்சிக்கு வாக்களித்து உங்களின் வாக்குகளை ஏன் வீணடிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்