

தமிழ்நாடு மனித உரிமை செல் அமைப்பு சார்பில் ஓசூர் பகுதியை சேர்ந்த 40 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருதுகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கெலமங்கலத்தில் தமிழ்நாடு மனித உரிமைகள் செல் அமைப்பு சார்பில் கல்வியில் சிறந்த சேவையாற்றிய நல்லாசியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.