இந்திய அரசியல் சாசனத்தை அழிக்க முயற்சி.." - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Update: 2024-04-30 10:31 GMT

ஏழைகளின் ஆன்மாவான அரசியல் சாசனத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், நடைபெறும் இந்தத் தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை என்றும், ஒருபுறம் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸும் அரசியல் சாசனத்தை அழிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் மகாலட்சுமி திட்டம் நாட்டில் உள்ள பெண்களை லட்சாதிபதிகளாக்கும் என ராகுல் குறிப்பிட்டார். தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் இந்திய அரசியல் சாசனம் மாற்றி அமைக்கப்படும் என பாஜகவினர் கூறி வருவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஏழைகளின் ஆன்மாவாக விளங்கும் அரசியல் சாசனத்தை எந்த சக்தியும் அழிக்க முடியாது என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்