"ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம்" - முதலமைச்சர்

அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-03-24 15:58 GMT
அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். திமுகவினர் பிரியாணி கடைகள், பியூட்டி பார்லர், செல்போன் கடைகளில் தாக்குதல்களில் ஈடுபட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். அரக்கோணம் பகுதி குடிநீர் தேவைக்காக, விரைவில் காவிரி நீர் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார். பெண்கள் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அப்பகுதியில் ஷ​ூ​ கம்பெனி ஒன்றை அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். வழக்கு மேல் வழக்கு போட்டு, திமுக கொடுத்த நெருக்கடி தான் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் எனவும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்