ஆஸ்கர் பட யானையை நேரில் பார்த்து மகிழ்ச்சியில் பொங்கி எழுந்த மக்கள்

Update: 2024-04-28 04:56 GMT

முதுமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆஸ்கர் படத்தில் நடித்த யானைகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். விடுமுறை தினமான நேற்று நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த ஆண்டு "the elephant wishbres" என்ற ஆவணப்படத்தில் நடித்து ஆஸ்கர் விருது வென்ற யானைகள் மற்றும் பொம்மன், பெள்ளி தம்பதிகளை சூழ்ந்து கொண்டு ஆர்வமுடன் புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து, யானைகளுக்கு உணவு கொடுக்கும் காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்