சென்னையின் மெயின் ஏரியாவில் - கத்தியோடு தகராறு செய்த இளைஞர் - போலீசார் எடுத்த அதிரடி ஆக்சன்

Update: 2024-04-28 04:34 GMT

சென்னை காசிமேட்டில் மதுபோதையில் கத்தியை வைத்து ரகளையில் ஈடுபட்ட ரவுடி கைது செய்யப்பட்டார். திருவள்ளுர் நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான லோகேஷ் என்கின்ற லோகு மீது காசிமேடு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் குடிபோதையில் இருந்த லோகு கையில் கத்தியை வைத்து கொண்டு தகராறு செய்வதாக அப்பகுதியில் மக்கள் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோகுவை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்