குழந்தை பிறந்ததும் கட்டுப்பாடு.. கர்ப்பிணி மரணம்.. - இன்னொரு கர்ப்பிணி மரணத்திலும் சந்தேகம்

Update: 2024-04-28 04:58 GMT

விழுப்புரம் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கம்பந்தூர் கிராமத்தை சேர்ந்த திவ்யாவிற்கு திண்டிவனம் அரசு மருத்துவனையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. பின்னர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மருத்துவர்கள் அலட்சியத்தால் தான் இளம்பெண் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..

Tags:    

மேலும் செய்திகள்