மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் - முத்தரசன்

மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-03-12 11:28 GMT
தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்றத்தில் தடை ஏதும் இல்லாதநிலையில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நிறுத்தி வைத்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்