"அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்பை ஊக்குவிக்கும் பாஜக" - சோனியா காந்தி குற்றச்சாட்டு

Update: 2024-05-07 16:05 GMT

காணொளி வாயிலாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய சோனியாகாந்தி, நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தையும், பட்டியல் இனத்தவர் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மற்றும் சிறுபான்மையினர் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் பாஜகவில் உள்ளோக்கத்தின் காரணமாகவே நாட்டில் இத்தகைய சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, எத்தகைய விலை கொடுத்தேனும் ஆட்சி அதிகாரத்தை பெறவேண்டும் என்பதை அவர்களின் நோக்கமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் வெறுப்பை ஊக்கப்படுத்தி வருவதாக விமர்சித்து உள்ளார்.

அனைவருக்குமான வளர்ச்சி வஞ்சிக்கப்பட்டவர்களுக்கான நீதி, வலிமையான நாடு போன்றவற்றிற்காக காங்கிரஸ், எப்போதும் போராடி வந்திருப்பதாக சோனியாகாந்தி கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்