"முடிவு காலம் குறிக்கப்பட்டுவிட்டது" - மேடையில் அடித்து சொன்ன பிரதமர் மோடி

Update: 2024-05-07 16:00 GMT

மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,

ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணியின் காலாவதி காலம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார். ஏழைகளின் பிரச்சனை என்று வரும்போது மட்டும் காங்கிரஸ் கட்சி நெருப்புக் கோழியை போல தனது தலையை மண்ணில் புதைத்துக் கொள்கிறது என்றும், தனது வாக்கு வங்கியை தாஜா செய்வதிலேயே இந்தியா கூட்டணி மும்முரமாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

முஸ்லிம் லீக்கின் சிந்தனைகளை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது என்று விமர்சித்தார். சதி செய்து, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களது வாக்கு வங்கியை, திரட்டுவதில் மும்முரமாக இருப்பதாக பிரதமர் மோடி, குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்