ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடை விழா... சுவாமிகளின் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

Update: 2024-05-07 14:38 GMT

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக சிறந்து விளங்குவது, திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவாகும். இந்த கொடை விழாவிற்கு திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான

பொது மக்கள், பல்வேறு சுவாமிகளின் வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். இதன்படி இந்தாண்டு கொடை விழா, கடந்த 5ஆம் தேதி மாக்காப்பு அலங்கார பூஜையுடன் தொடங்கியது. இதனையொட்டி, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பல்வேறு சுவாமிகளின் வேடமணிந்து ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்