கருணாஸை மட்டும் கைது செய்தது தவறான செயல் - விஜயகாந்த்

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸின் கைதை கண்டிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-23 14:21 GMT
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபகாலமாக எத்தனையோ பேர் எத்தனையோ கருத்துக்களைப் பேசி வரும் நிலையில் கருணாஸை மட்டும் கைது செய்து இருப்பது தவறான செயல் என்று கூறியுள்ளார். தண்டனை என்பது தவறு செய்பவர்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நியாயமான முறையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்