நிறுத்தப்பட்ட படகு சேவை - மீண்டும் தொடக்கம் | nagai | Srilanka

Update: 2024-05-05 05:25 GMT

நிறுத்தப்பட்ட படகு சேவை - மீண்டும் தொடக்கம்

நாகையிலிருந்து இலங்கைக்கு வரும் 13-ஆம் தேதி முதல் மீண்டும் பன்னாட்டு பயணிகள் படகு போக்குவரத்து இயக்கப்படும் என சிவகங்கை பெர்ரி படகு நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடல் சீதோஷ்ண நிலை காரணமாக, நாகை-யாழ்ப்பாணம் இடையே நிறுத்தப்பட்டிருந்த பன்னாட்டு பயணிகள் படகு போக்குவரத்து சேவை மீண்டும் வரும் 13ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாகவும், இதற்காக அந்தமானில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட பெர்ரி படகு வரும் பத்தாம் தேதி நாகை துறைமுகத்திற்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரே நேரத்தில்160 பேர் வரை பயணிக்க முடியும் எனவும், பயண கட்டணமாக ஒரு நபருக்கு 4 ஆயிரத்து 956 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்