அரசுப் பேருந்து மீது கல்வீசிய விவகாரம்...இளைஞரை அடித்து துன்புறுத்திய போலீசார்?

Update: 2024-05-05 06:11 GMT

அரசுப் பேருந்து மீது கல்வீசிய விவகாரம்...இளைஞரை அடித்து துன்புறுத்திய போலீசார்? - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்கப்பட்ட விவகாரத்தில் எந்தவொரு முகாந்திரம் இல்லாமல் தனது மகனைப் போலீசார் கைது செய்திருப்பதாக அவரது தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார். தெற்குதிட்டை கிராமத்தில் கடந்த 2-ம் தேதி இரவு அரசு பேருந்து மர்மநபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் அதே கிராமத்தை சேர்ந்த இளமாறன் என்பவரது மகன் சந்திரமௌலி சந்தேகத்தின்பேரில் போலீசார் அழைத்து வந்து விசாரித்து இரவுமுழுவதும் காவல்நிலையத்தில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. வேண்டுமென்றே பொய் வழக்குப்பதிவு செய்து தன் மகனை காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தி போலீசார் ஒப்புக் கொள்ளவைத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்துள்ளதாக சந்திரமௌலியின் தந்தை இளமாறன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்