பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை.. அதிரடியாக பாய்ந்த போக்சோ சட்டம்.. போலீஸ் அதிகாரி மீது மாணவி புகார்

Update: 2024-05-05 05:15 GMT

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூரை சேர்ந்த 45 வயதான ராஜலிங்கம் என்பவர் கடலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர், 9-ம் வகுப்பு படித்து வந்த தனது மகளுக்கு சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தனது தந்தை மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், மாணவியின் தந்தையான ராஜலிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்