அயோத்தி வழக்கு : "வதந்திகளை நம்ப வேண்டாம்" - உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-11-09 01:52 GMT
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமைதி காக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை என்றும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஆதித்ய நாத் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்