வாட்டி வரும் கோடை வெயில்...மழை வேண்டி மனம் உருகி வேண்டிய இஸ்லாமியர்கள்

Update: 2024-05-05 01:50 GMT

கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பரம்பூர் கண்மாயில் முஸ்லிம் ஜமாத் சார்பில் கண்மாயில் தக்பீர் முழக்கத்துன் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் கிடைக்கவும் தொழுகை நடத்தி சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. புதுக்கோட்டை ஜமாத் கூட்டமைப்பின் சார்பாக ஈத் கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய பெருமக்கள் ஏராளமான கலந்து கொண்டு மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த சிறப்பு தொழுகையில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்...

ஈரோடு கருங்கல்பாளையம் ஜன்னத்துல் பிர்தோஸ் பள்ளிவாசலில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் சக்கராப்பள்ளி சமூக பூங்காவில் திறந்தவெளியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்