தந்தையை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்த மகன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மகன் மீட்பு

Update: 2024-05-04 18:01 GMT

புதுக்கோட்டை அருகே, தந்தையை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்

அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியை சேர்ந்த கணேசனுக்கும், அவருடைய மூத்த மகன் வினோத்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த வினோத்குமார், கம்பியால் தலையில் தாக்கியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் போலீசாருக்கு பயந்த வினோத்குமார், வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அங்கு இடுப்பளவு மட்டுமே தண்ணீர் இருந்ததால் உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார், வினோத்குமாரை மீட்டு, கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்