நீலகிரிக்கு வரும் வாகனங்கள் கவனத்திற்கு.. மே 7-ந்தேதி முதல் இது கட்டாயம்

Update: 2024-05-05 01:56 GMT

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என நீலகிரி கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இ-பாஸ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்றும், எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், ஆன்லைனில் விண்ணப்பிக்குக்கும்போது கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்