உறவினரைக் கடத்திய கும்பல் - நக்கல்பட்டியை பரபரப்பாக்கிய அந்த சம்பவம்

Update: 2024-05-04 17:41 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, கடனை திருப்பித் தராததால், உறவினரை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். நக்கல்பட்டியை அடுத்த ஒன்டியூர் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவர், தனது உறவினரான மாதேஷ் என்பவரிடம் 34 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பல முறை கேட்டும் கடனை திருப்பித் தராததால், ஆத்திரமடைந்த மாதேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலாஜியை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பி வந்த பாலாஜி, காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மாதேஷ் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்