நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு - வெளியான அதிர்ச்சி காரணம்

Update: 2024-05-05 01:43 GMT

வங்கியில் கடன் பெற்று ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜெபசோபியா உள்ளிட்ட 10 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி பொறுப்பில் இருக்கும் சரவணன் என்பவர் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி எங்கள் ஆவணம் மூலம் கடனை பெற்று பணத்தை எடுத்து கொண்டதாகவும், அதற்கான EMI பணத்தை கட்டி விட்டு கமிஷன் தருவதாகவும் கூறி ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.

Tags:    

மேலும் செய்திகள்