கபினி அணையில் வழிபாடு நடத்திய கர்நாடக முதலமைச்சர்

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கபினி அணையில் மாநில முதலமைச்சர் எடியூரப்பா வழிபாடு நடத்தினார்.

Update: 2019-09-07 11:39 GMT
இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து 54 ஆயிரத்து 800 கன அடியாக உள்ள நிலையில் நீர் வெளியேற்றம் 53 ஆயிரம்  கன அடியாக உள்ளது. இதேபோல் கபினி அணையும் தன் முழு கொள்ளளவை எட்டியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்காக கபினி அணைப்பகுதிக்கு சென்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பூஜைகள் செய்து வழிபட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்