"இது ஒரு முக்கியமான வழக்கு....போக போக தெரியும்" நடிகை கௌதமியின் முக்கிய தகவல்

Update: 2024-05-07 04:42 GMT

நடிகை கௌதமி ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார். மூன்று மணி நேரத்திற்கு மேல் எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் தொடர்பான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வெளியில் வந்த நடிகை கௌதமியிடம் எது தொடர்பாக புகார் அளித்திருக்கிறீர்கள் யார் மீது புகார் அளித்திருக்கிறீர்கள் என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இது ஒரு முக்கியமான வழக்கு, அது என்ன என்பது போக போக உங்களுக்கு தெரிய வரும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்