ஆந்திர மாநில புதிய டிஜிபி - ஹரிஷ் குமார் குப்தா நியமனம்

Update: 2024-05-07 04:57 GMT

ஆந்திர மாநிலத்தின் புதிய டிஜிபி-யாக ஹரிஷ் குமார் குப்தாவை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. முன்னதாக டிஜிபி-யாக பணியாற்றி வந்த கே.வி.ராஜேந்திரநாத்தை, நேற்று பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, புதிய டிஜிபி-யாக நியமிக்கப்பட்ட ஹரிஷ் குமார் குப்தாவிற்கான பணி நியமன ஆணைகள் உடனடியாக வெளியிடப்பட்டு, தாமதமின்றி பணியில் சேர அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்