#Breaking|| தமிழகமே உற்றுநோக்கிய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி திருப்பம்.. கொலையா? தற்கொலையா?

Update: 2024-05-07 04:21 GMT

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கடந்த நான்காம் தேதி அவரது உடல் அவரது தோட்டத்தின் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது

பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது

உடற்கூறு பரிசோதனையின் முடிவுகள் நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் இடம் வழங்கப்பட்டுள்ளது

தற்கொலைக்கான எந்த அடையாளமும் கிடைக்கபெறவில்லை என அறிக்கையில் தகவல்

ஜெயக்குமார் உயிரிழந்த பிறகு அவரது சடலம் தோட்டத்தில் எரியூட்டப்பட்டு இருக்கலாம் என்பது தகவலாக உள்ளது

அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாக தெரிகிறது

கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதால் விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது

உடற்கூறு பரிசோதனையின் முடிவுகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டு விட்டாலும் இதனை உயர் மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்துவதற்காக சென்னைக்கு Expert opion பெற உடற்கூறு பரிசோதனை அறிக்கை அனுப்ப திட்டம்

Tags:    

மேலும் செய்திகள்