#Breaking|| காங். நிர்வாகி மர்ம மரணம்.. மிரளும் களம்.. ஆஜராகும் KV தங்கபாலு

Update: 2024-05-07 04:54 GMT

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் காவல்துறை விசாராணைக்கு இன்று ஆஜராகிறார்.

ஏற்கனவே காங்கிரஸ் மாவட்ட தலைவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

15-க்கும் மேற்பட்டோர் இடம் நேரில் விசாரணையும் காவல்துறையினர் மேற்கொண்டு உள்ளனர்.

விசாரணை தீவிரம் எடுத்துள்ள நிலையில் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் தொடர்புடையவர்களை நேரில் அழைத்து விசாரணையை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே நெல்லை மாவட்ட காவல்துறையினர் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

அதன் அடிப்படையில் விசாரணைக்கு இன்று மதியம் கேவி தங்கபாலு நெல்லை மாவட்ட காவல்துறையினர் முன்பு ஆஜராகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்