காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பலத்த காயம்

கேரளாவில் கோயிலுக்கு வழிபாடு நடத்த சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Update: 2019-04-15 09:10 GMT
கேரளாவில் கோயிலுக்கு வழிபாடு நடத்த சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கோயிலுக்கு சென்ற போது, அவர் வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சசி தரூர்க்கு தலையில் 6 தையல் போடப்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சசி தரூர் உயிருக்கு ஆபத்து எல்லை என்று தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்