வாக்குச்சாவடி மையத்தில் தகராறு - VAO தற்காலிக பணி நீக்கம்

Update: 2024-05-05 04:09 GMT

வாக்குச்சாவடி மையத்தில் தகராறு - VAO தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் மக்களவை தேர்தலின்போது தகராறில் ஈடுபட்டதாக, கிராம நிர்வாக அலுவலரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் 19ம் தேதி நடந்த மக்களவை தேர்தலின் போது மாங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய அன்பு செல்வனுக்கும், மாங்குடி வாக்குச் சாவடி உதவி மண்டல அலுவலர் முத்து முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், கிராம நிர்வாக அலுவலர் அன்பு செல்வனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்....

Tags:    

மேலும் செய்திகள்