முதல் Heat Stroke நோயாளி..ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் சொன்ன தகவல்

Update: 2024-05-05 04:11 GMT

முதல் Heat Stroke நோயாளி..ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் சொன்ன தகவல்

சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் முதல் "ஹீட் ஸ்டிரோக்" நோயாளி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்த 35 வயது இளைஞர், சென்னை பூந்தமல்லியில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்த நிலையில், கடும் வெயிலால் கணுக்கால் பகுதி மரத்துப் போயுள்ளது. பின்னர், உடல் நலம் பாதிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஹீட் ஸ்டிரோக் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், கணையம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்