வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனை..கவலை தெரிவித்துள்ள ஜப்பான்
வட கொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளுக்கு ஜப்பான் கவலை தெரிவித்து உள்ளது.
வட கொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளுக்கு ஜப்பான் கவலை தெரிவித்து உள்ளது. டோக்கியோவில் இது தொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சமீபத்தில்தான் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வட கொரியா பரிசோதனை செய்ததாகவும், தற்போது மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதித்து இருப்பது கவலை அளிப்பதாகவும் கூறினார். வட கொரியாவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் ஜப்பான் பிரதமர் கிஷிடா தெரிவித்தார்.