"வரும் 31 வரை மெரினாவுக்கு செல்ல தடை" - உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மெரினா கடற்கரைக்கு வருகிற 31ஆம் தேதி வரை மக்கள் செல்ல அனுமதி இல்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Update: 2020-10-05 10:10 GMT
சென்னை மெரினா கடற்கரைக்கு வருகிற 31ஆம் தேதி வரை மக்கள் செல்ல அனுமதி இல்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மெரினாவில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மாநகராட்சி நிர்வாகம் இவ்வாறு கூறியுள்ளது. இதை ஏற்ற நீதிபதிகள், தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர், மீன் சந்தை திறப்பது உள்ளிட்டவை குறித்து நவம்பர் 11ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்