"சொந்த அனுபவத்தில் இருந்து கூறுகிறாரா மோடி...? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

Update: 2024-05-09 01:46 GMT

சொந்த அனுபவத்தில் இருந்து கூறுகிறாரா மோடி...? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அம்பானி, அதானியைப் பற்றி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்தி விட்டதாக கூறினார். அம்பானியும், அதானியும், ஒரு டெம்போவில் ராகுல் காந்திக்கு பணம் கொடுத்ததாகவும் மோடி குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி வெளியிட்ட காணொளியில், டெம்போவில் பணம் வந்ததாக கூறும் பிரதமர் தனது சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்படியெனில், அம்பானி, அதானி ஆகியோரின் வீடுகளுக்கு சிபிஐ, அமலாக துறையை அனுப்பி விரிவான விசாரணை நடத்துங்கள் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். அம்பானி, அதானி ஆகியோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பணத்துக்கு சமமான தொகையை, இந்த நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி பகிர்ந்து அளிக்கும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்