காற்றுக்காக திறந்திருந்த கதவு.. நள்ளிரவில் ஆசிரியைக்கு நடந்த அதிர்ச்சி.. சென்னையில் பரபரப்பு

Update: 2024-05-09 01:51 GMT

சென்னை கோயம்பேடு பகுதியில் வீடு புகுந்து கத்தியை காட்டி பெண்ணை பலாத்காரம்

செய்த நபரை போலீசார் கைது. செய்தனர். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து அப்பெண்

தனது 2 மகள்களுடன் காற்றுக்காக வீட்டின்

கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அவரது கணவர் இரவில் ஆட்டோ ஓட்ட சென்ற நிலையில்,

குடிபோதையில் இருந்த ஜான் பால்ராஜ் என்ற நபர் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம‌டி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்