மதுவுக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை.. மன உளைச்சலில் இளைஞர் விபரீத முடிவு

Update: 2024-05-09 00:44 GMT
  • தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே, குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
  • தென்காசி, அனந்தபுரம் ரயில்வே கேட் பகுதியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியவே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஆய்க்குடியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவத்தில், ஐயப்பனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐயப்பன் மதுபோதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்