கார் கவிழ்ந்து விபத்து - கணவன், மனைவி உயிரிழப்பு

நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கார் திண்டிவனம் அருகேயுள்ள ஒலக்கூர் பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது மோதியதால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2020-10-05 07:28 GMT
நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கார் திண்டிவனம் அருகேயுள்ள ஒலக்கூர் பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது  மோதியதால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில்  சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் தியாகேசுவரன்   மற்றும் அவருடைய  மனைவி ஜெயா  ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,. மேலும் அவர்களுடன் பயணித்த 4 பேர் பலத்த காயங்களுடன் திண்டிவனம்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து தகவலறிந்து சென்ற  ஒலக்கூர் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்