சட்டென மாறிய வானிலை.. "சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு.." - வானிலை மையம் சொன்ன குளுகுளு நியூஸ்

Update: 2024-05-08 02:15 GMT

சென்னை உட்பட 14 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில், கிண்டி,கலவை,மாம்பலம்,வேளச்சேரி, மதுரவாயல், அம்பத்தூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்