காலைக்கடன் கழிக்க சென்ற நபர் மரணம்... பறந்து வந்த எமனால் பரிதாபம்

Update: 2024-05-08 02:11 GMT

ஓசூர் அருகே, காலை கடன் கழிக்க சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.

ஒருவர் படுகாயம் அடைந்தார். கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவர் கொத்தூர் என்ற இடத்தில், காலை கடன் கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து, அவரை துரத்தி துரத்தி தாக்கியுள்ளது. அதேபோல் அந்த இடத்தில் இருந்த கட்டிட மேஸ்திரி சென்னப்பன் என்பவரையும் தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டி உள்ளது. அதில் அவர் படுகாயமடைந்தார். இதில் கோபால் என்பவர் உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்