சென்னை வாசிகளுக்கு ஒரு குட் நியூஸ் || chennai

Update: 2024-05-08 02:12 GMT

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தலை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, ஈ.வெ.ரா பெரியார் சாலை, ராஜா முத்தையா சாலை சந்திப்பு, அண்ணா நகர் ரவுண்டானா, நியூ ஆவடி சாலை மூன்றாவது அவுன்யு, கீழ்பாக்கம் சேத்துபட்டு போக்குவரத்து சிக்னல், அடையாறு எல்.பி.சாலை, திருவான்மியூர் சந்திப்பு, அடையார் சந்திப்பு, ஓ.எம்.ஆர் சந்திப்பு ஆகிய இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. பசுமை பந்தல் சாயாத வகையில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்