குழந்தைகளுடன் சேர்ந்து தாயை கத்தி முனையில் மிரட்டிய திருடர்கள்... போலீசார் வலை

Update: 2024-05-08 02:08 GMT

திருச்செந்தூர், இசக்கியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுதா செல்வி என்பவரின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சுதா செல்வி மற்றும் அவரின் இரு குழந்தைகளையும் கொள்ளையர்கள் வீடு புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இதில், 15 சவரன் நகைகள் மற்றும் 59 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. கணவர் இரவு நேர வேலைக்கு சென்றதை நோட்டமிட்டு கொள்ளையர்கள் அரங்கேற்றிய இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்