``எங்க அப்பாவ கொண்டுவாங்க...'' - மலேசியாவில் பிரிந்த உயிர்..கண்ணீரில் மகள்.. களமிறங்குவாரா கலெக்டர்?

Update: 2024-05-08 02:17 GMT

மலேசியாவில் உயிரிழந்த கணவரின் உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரியும், தகுந்த இழப்பீடு வழங்கக்கோரி, மனைவி மற்றும் மகள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பரமக்குடியை அடுத்த சரஸ்வதி நகரைச் சேர்ந்த

தெய்வானை என்பவரது கணவர் ராமையா,

மலேசியாவில் கூலி வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர், இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால் பதறிய மனைவி மற்றும் மகள், ராமையாவின் உடலை மீட்டு, தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்