அக்.1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்

தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2020-09-24 10:57 GMT
தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. விருப்பத்தின் பேரில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை அனுமதிக்கலாம் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, விரைவில் மற்ற வகுப்பு மாணவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக 28ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்