நள்ளிரவில் வரும் ராட்சசன்.. தயார் நிலையில் கொல்கத்தா

Update: 2024-05-26 11:25 GMT

வடக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ரீமால் புயல், 6 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை தீவிர புயலாக வலுவடைந்தது. இது வங்கதேசத்தின் கெபுபாராவிற்கு தென் மேற்கே 290 கி.மீ. தொலைவிலும், மோங்லாவிலிருந்து தெற்கே 330 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதுதொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே இன்று நள்ளிரவு தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையை கடக்கும்போது, மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்